அரசியல்
வரலாற்று சாசனமான தமிழரசனின் தமிழ்த்தேசியப் பிரகடனம்
தேசிய இனத்திற்கும், இனவாத அரசியலுக்கும் வேறுபாட்டை புரிந்து கொள்ள அவரது அறிக்கைகளே முதன்மையானவை. ஏழை தமிழ்மக்களின் மீதான சுரண்டல்களை நடத்துபவர்களை அடையாளம் காட்டியவர். ஏகாதிபத்திய- இந்திய முதலாளிகள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்குள்ளாக சுரண்டும் முதலாளிய ஆற்றல்களையும் எதிரிகளென அடையாளப்படுத்தியவர். தமிழ்த்தேசிய எழுச்சிக்கு தடையாக இருக்கும் முதன்மை சக்தியாக சாதியை சுட்டி, சாதிய சுரண்டலின் அடித்தளத்தை ஆய்வுப்பூர்வமாக அணுகியவர். சாதி ஒழிப்பு அரசியலின் வரலாற்று பாத்திரத்தை குறிப்பிட்டு, அதற்கான செயல்திட்டத்தை வடிவமைத்தார் தமிழரசன்.